தீண்டாமையை தீண்டிடு,தீயென எரித்திடு,தீமை அதை புறந்தள்ளுதிறமை அதன் துணைக்கொண்டு! ஏழ்மை அதை மிதித்திடு,எரிமலை என வெடித்திடு,எட்டுத்திக்கும் தேடிடு,ஏற்றம் உண்டு ஏறிடு! கண்ணீரில் ஓடம்மிதந்ததுபோதும்,பாற்கடல் உனக்கு,போடிடு துடுப்பு,எடுத்த எடுப்புமுடித்திடு இறைவன்போட்ட கணக்கு! சரி என வகுத்தவன் யார்?தவறென பிரித்தவன் யார்?விடியாத காலை உண்டோ?முடியாத செயலும் உண்டோ? தட்டிக்கொடுத்து,கட்டியணைத்து,நித்தம் உழைத்து,வெற்றி பெருக்கு!
Tag: love
One last time ever!
Throwback 2020
கிறுக்க(ன்)ல்
மழைத்துளி பூவிதழில் தங்குமோ? மழலை மொழி புரியுமோ? அத்திமலர் தினம் பூக்குமோ? ஆகாயத்தாமரை குளத்தில் மூல்குமோ? பரிசல் கடல்கடக்குமோ? பாசக்கயிறு நிக்குமோ? ஏழைப்பசி தணியுமோ? ஏக்கம் மலையேறுமோ? பட்டாம்பூச்சி மேகம் தாண்டுமோ? மேகம்தான் ஒர் இடத்தில் நிலைக்கொள்ளுமோ? உடைந்த கண்ணாடி இணையுமோ? கூழாங்கல் மிதக்குமோ? கூட்டான்சோறு கசக்குமோ? உன்நினைவுதான் மறையுமோ?
An introvert’s letter to the world
An introvert's letter to the world!
“மை”யல்கொண்டேன்
மைல்கள் தாண்டிவர தோன்றுமே,உன் மையல்முகம்காணத்தானே! கண்கள் மறைக்கும்உண்மையை,உன் கண்மைகாட்டிக்கொடுக்குமே! அழகாய்தீட்டி இருந்தால்,வர்ணனைஎதிர்பார்க்கிறாள்என்பேனோ… அளவாய்தீட்டி இருந்தால் ,சட்டென்று முடியும் சந்திப்புஎன்பேனோ… கண்மை கொஞ்சம்கீழே அழிந்திருந்தால்,வேலைப்பழுதலைக்கு மேலேஎன்பேனோ… கன்னம் வரைநீண்டு இருந்தால்,உன் அழுகைக்கான காரணம் கண்டுப்பிடிப்பேனோ… கண்டதும் கண்ணீர்கண்ணை நனைத்தால்உன் உள்ளம்சொல்ல துடிப்பதைகேட்பேனோ… தீட்டிய மைதெரியாதவாறுஇமை மூடினால்,உன்வெட்கம்அதை ரசிப்பேனோ… உன் "மை"சொல்லுதடிஉண்மையை… பகலெல்லாம்ஒட்டி ஒட்டி உறவாடிஇரவெல்லாம்கட்டியணைக்கும்,உன் இமைக்குமையாய் என்னையும் பூசிக்கொள்ளமாட்டாயோ?