An introvert's letter to the world!
An introvert’s letter to the world
An introvert's letter to the world!
Follow your heart; write your thought !
An introvert's letter to the world!
மைல்கள் தாண்டிவர தோன்றுமே,உன் மையல்முகம்காணத்தானே! கண்கள் மறைக்கும்உண்மையை,உன் கண்மைகாட்டிக்கொடுக்குமே! அழகாய்தீட்டி இருந்தால்,வர்ணனைஎதிர்பார்க்கிறாள்என்பேனோ… அளவாய்தீட்டி இருந்தால் ,சட்டென்று முடியும் சந்திப்புஎன்பேனோ… கண்மை கொஞ்சம்கீழே அழிந்திருந்தால்,வேலைப்பழுதலைக்கு மேலேஎன்பேனோ… கன்னம் வரைநீண்டு இருந்தால்,உன் அழுகைக்கான காரணம் கண்டுப்பிடிப்பேனோ… கண்டதும் கண்ணீர்கண்ணை நனைத்தால்உன் உள்ளம்சொல்ல துடிப்பதைகேட்பேனோ… தீட்டிய மைதெரியாதவாறுஇமை மூடினால்,உன்வெட்கம்அதை ரசிப்பேனோ… உன் "மை"சொல்லுதடிஉண்மையை… பகலெல்லாம்ஒட்டி ஒட்டி உறவாடிஇரவெல்லாம்கட்டியணைக்கும்,உன் இமைக்குமையாய் என்னையும் பூசிக்கொள்ளமாட்டாயோ?